Thursday, September 27, 2018

மக்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.  அனைவரும் நலமா?
ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்தேன்.  ஒரு அப்டேட்டும் இருக்காதுன்னு வந்தா தாமுவோட பதிவு. 

சரி நாமளும் எழுதலாமேன்னு தோணித்து.  இருபத்தைந்து வருடத்திய நினைவை அசை போட ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூவில் இப்ப கடந்த பத்து வருட நினைவுகளை எழுதலாம் போல உள்ளது.  ஒரு வேளை எனக்கு மட்டும் தோணலாம், ஒரு இடைவெளி ஏற்பட்டதால்.

ஜோ, ஸ்ரீ, கமலா கூட டச்ல தான் இருக்கேன் ஃபேஸ்புக்ல.  என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம், அதிருப்தி இருக்கலாம், எதையும் வெளிப்படையாக பேசியதால், எல்லாவற்றிற்கும் கருத்து கூறியதால், சில சமயம் அறிவுரை கூறியதால்.  மன்னிச்சு ஃபார் தட்.

என்னால, எல்லா சந்திப்புகளிலும் கலந்து கொள்ள முடியாது போகலாம்.  அதானல் நட்பு இல்லை என்று ஆகி விடாது.  என்னமோ இன்று இந்த வகுப்பறை வந்த உடன் பழைய நினைவுகள், இதழோரம் புன்னகை வரவழைக்கிறது.  மகிழ்ச்சியான பல தருணங்கள்.  

இதை எத்தனை பேர் படிப்பீர்கள் தெரியவில்லை.  மீண்டும் குழுவில் இணையும் ஆசை வந்து விட்டது பழைய பதிவுகளை படித்ததில்.  ஆனால் மற்றவர்கள் தயாரா தெரியவில்லை.  பார்ப்போம் ரிக்வெஸ்ட் அனுப்பி.


நட்புடன்
ஜெயந்தி

No comments: