Monday, November 21, 2011

எங்கேயும் எப்போதும்

ரொம்ப லேட்டா எழுதறேன். ஆனால் எனக்கு இப்பதான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு படம். கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படம்.

தினமும் விபத்துகளைப் பற்றிய செய்திகளை படித்து விட்டு ச்சோ ஐயோ பாவம்”….. பாதிப்புகளுக்கு ஏற்றபடி ஒரு expression கொடுத்து விட்டு அடுத்த
வேலைக்கு சென்று விடுகிறோம்.

காரில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட இரு விபத்துகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் மற்றொன்று, என் மகளுடன் படித்த பெண்ணின் தாய். பெண்ணை பாட்டு க்ளாஸில் விட்டு விட்டு வரும் போது எதிரே காரில் வந்தவன் செய்த இதே தவறால் ஸ்பாட்ல உயிர் இழந்து விட்டாள். இரண்டு பெண் குழந்தைகள். (17 வயது மற்றும் 11 வயது). மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
வண்டிய எடுக்கவே இப்பலாம் தயக்கமா இருக்கு. எந்த கிறுக்கன் எப்படி வண்டி ஓட்டுவனோன்னு பயமா இருக்கு.

பிறந்தவர்கள் எல்லாரும் ஒரு நால் இறக்கத்தான் வேண்டும். அதற்காக இப்படி சற்றும் எதிர்பாரமல் விபத்தில் உயிரை இழப்பது கொடுமை.
மருந்துகளுக்கு ஒரு expiry date போடுவது போல் நமக்கும் பிறக்கும் போதே expiry date போட்டுத்தான் ஆண்டவன் படைக்கிறான் போல.
என்ன பிந்தயது எப்ப எப்படின்னு நமக்கு தெரிய மாட்டேங்கறது. தெரிஞ்சாலும் கஷ்டமாத்தான் இருக்கும். சுஜாதா சொன்னாப்ல, “சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகம் ஆயிடும்”

No comments: