Friday, July 10, 2009

சும்மா கிறுக்கி தள்ளு

அட டா இப்படி அடுப்புல பூன தூங்கின கணக்கா ஆகிப் போச்சே....

அட நம்ம வழக்கப்படி மிஞ்சி போனா 13 நாள் அதுக்கப்புறம் இருக்கறவங்க வேலய பாக்கனுமப்பா..அத விட்டுட்டு இப்படி மகா தவறி போனதுல ரொம்ப பீலீங் ஆயி, தல திரும்ப வாங்கன்னு கூப்டப்புறமும் இப்படி ஒரு பயலயுங் காணோமே..

எப்பவும் எழுதர மூ&*** இவனுக்கு என்னவாச்சுன்னு எனக்கு ஒரு தனி அஞ்சல் வந்தது...

என்னா பதில் போட்டேன்னாக்க:

நம்ம ஊர்ல புது வருஷம் பொறந்ததுனா அநேகமாக பத்துல ஆறு பேருக்கு ஒரு புதுவருட டைரி வந்து சேரும். எதுக்கு அந்த டைரின்னு எனக்கு பல காலம் புரிஞ்சதில்ல. என் நண்பன் வீட்டுல அவங்க அம்மா லாண்டரிக்கு துணி போடரப்ப அந்தந்த தேதில குறிச்சு எழுதிப்பாங்க இது தவிர நான் டைரிய சரியா உபோயோகப்படுத்தர யாரயும் பாத்தது இலல. அதுமாதிரி வகுப்பறை மக்களுக்கு இந்த வலைபதிவு. இதில என்ன எழுதறதுன்னு தெரியல. இதெல்லாம் சொல்லிக் கொடுக்கவா முடியும்?

ஒலகம் பெரிசு மாமேய், அதுல நடக்குது பத்தி ஒரு வரி கூடவா எழுத முடியல??

நாளக்கி (11 July 09) நம்ம தல ஏற்பாட்டுல நம்ம பள்ளிக்கூடத்துலயே +2 செட்டு மக்க எல்லாம் கூடுறாங்கோ. அட்லீஸ்ட் அத் வெச்சாவது இங்க வந்து எதையாவது எழுதுங்கப்பா.

அய்யா ஊட்டிகாரரே, இந்த ”கண்ணகள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” பாட்ட பாடின பெல்லி ராஜ் உங்க ஊர் காரராமே? ஒரு பேட்டில சொன்னாப்டி. உன் ஞாபகம் வந்தது.

சரி இப்போதைக்கு கிறுக்கரத(நம்ம சகா ஒருத்தரு இந்த தலைப்பிலேயே வல செச்சுருக்காஹ) நிப்பாட்டிக்கறேன்...

டிஸ்.கி: இப்படி எல்லாம் ஒரு பதிவ போடாட்டின்னு முனு முனுக்றவங்களுக்கு (குடி)தண்ணி சப்ளைய நிறுத்திருவோம் ஜாக்கிரத.

No comments: