Sunday, October 17, 2010

யானைக்கும் அடி (முட்டி) சறுக்கும்!!

சென்ற மாதம், முதுமலை புலிகள் சரணாலய எல்லைக்குள் ஒரு காட்டு யானைக்கு நடந்த கொடுமை!! சீகூர் வனப்பகுதியில் , இடது கால் முட்டியில் சீழ் பிடித்த புண்ணுடன் ஓர் ஆண் யானை நடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. வனத்துறை, தேர்ச்சி பெற்ற யானைகளை கொண்டு அதனை கட்டுப்படுத்தி, சிகிழ்ச்சை அளிக்க முயற்சித்தது. சிகிழ்ச்சை பலனின்றி அந்த காட்டு யானை, பரிதாபமாக இறந்தது.










பிரேத பரிசோதனையில், கால் முட்டி எலும்புகள் துகள்கள் ஆகி இருந்தது தெரிய வந்தது. அது, துப்பாக்கியால் சுடப்படிருக்கலாம். விவசாய கட்டுக்கள் உணவுக்காக வரும் காட்டு யானைகளை விஷமி விவசாயிகள் இவ்வாறு சிறு (உடனே கொல்லும் வலிமை இல்லாத) துப்பாக்கிகளால் சுடுவது வழக்கம். இதன் 'பயன்கள்' என்னவென்றால்,

1. சுடப்பட்ட யானை, உடனே சாவதில்லை. அதனால் விவசாயிக்கு பிரச்னை குறைவு.
2. சுடப்பட்ட யானை இறந்தாலும், அது பல மயில்களுக்கு அப்பால் நிகழும்
3. சுடப்பட்ட யானை பிழைத்தாலும் அது மீண்டும் அந்த தோட்டத்துக்கு வராது




என்ன கொடுமை சரவணா!! நெஞ்சு பொறுக்குதில்லையே!




1 comment:

கிவியன் said...

திங்கட்கிழமை காலையில் மின்னஞ்சலை திறந்தால் இந்த பதிவு சுட்டி. மனசெல்லாம் கனத்து போச்சு.

புலிகளுக்கு அடுத்து, யானைகளும் காணாமல் போய்விடக்கூடும் நாள் அதிக தூரமில்லை போலிருக்கிறது.