Tuesday, July 16, 2013

கலங்காதிரு மனமே

யாரோ சொல்றாங்கனு மனம் கலங்கிடப்டாது மக்களே...
தொடர்ந்து வரும் தொல்லைகளை படித்துத்தான் ஆக வேண்டும்....
நீங்களே கலங்கி நின்னா,
நான் வேற எங்க போவேன்...


அலைகள்

ஆழ்கடல் மேடையிலே
அசைந்தாடும் நர்த்தகி போல்
நளினமாய் நடனமிட்டு
கரை தொடும் பேரலையே..

ஆழ்கடல் வீதியில்
துள்ளி விளையாடும் சிறு பிள்ளை
தாயாக கரையை எண்ணி
முத்தமிடும் பேரலையே..

ஆழ்கடல் களத்தினிலே
போரிடும் வீரனை போல்
ஆக்ரோஷமாய் சண்டையிட்டு
கரை கண்டு அமைதியான பேரலையே..

ஆழ்கடலெனும் தாய்க்கு
அடங்காது ஓடி வந்து
கரையெனும் தகப்பனுக்கு பயந்து
பின் செல்லும் பேரலையே..

ஆழ்கடல் ப்ரஞ்சத்தில்
புயலாய் ஆர்ப்பரித்து, பின்
தென்றலாய் அசைந்து வந்து, என்
பாதம் கழுவும் பேரலையே



மழை

வானமகள் விடும் கண்ணீரில்
பூமித்தாய்க்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி??


ஊனம்

நெடிதொரு கனவில்
ஆழ்கடலில் நீந்தினேன்
மலையின் சிகரம் எட்டினேன்
பாலைவனத்தில் கால் புதைய நடந்தேன்
மகிழ்ச்சியில் திளைத்தேன்
விழிப்பு வந்து
மரக்கால் தரையில் ஊனும் வரை


No comments: