Wednesday, July 17, 2013

தென்றல்

இயற்கையின் செல்லக் குழந்தையாய்
தவழ்ந்து வந்து
மலையில் ஏறி
நதியில் நீந்தி
மரம் செடியுடன் கை குலுக்கி
பகல் நேர வெப்பம் தணித்து
எனைக் குளிர வைக்க
ஓடோடி வந்த தென்றலே

மலர்களை தழுவி வந்து
எங்கும் மணம் பரப்பி
இனிய பாடலொன்றை
இதமாய் சுமந்து வந்து
உறங்கிய என்னை தட்டி எழுப்பி
கூந்தலை வருடி
காதோடு ரகசியம் சொன்ன
எனதருமை தென்றலே....

No comments: