இயற்கையின் செல்லக் குழந்தையாய்
தவழ்ந்து வந்து
மலையில் ஏறி
நதியில் நீந்தி
மரம் செடியுடன் கை குலுக்கி
பகல் நேர வெப்பம் தணித்து
எனைக் குளிர வைக்க
ஓடோடி வந்த தென்றலே
மலர்களை தழுவி வந்து
எங்கும் மணம் பரப்பி
இனிய பாடலொன்றை
இதமாய் சுமந்து வந்து
உறங்கிய என்னை தட்டி எழுப்பி
கூந்தலை வருடி
காதோடு ரகசியம் சொன்ன
எனதருமை தென்றலே....
No comments:
Post a Comment