Friday, February 27, 2015

என் தகப்பன் சாமி

என் தகப்பன் சாமி
     அப்போது  என் பெரிய மகன் ஹரீஷ் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் மாலை வநது ஒரு சர்குலரை நீட்டினான். பிரித்த படித்தேன். 
 அன்புள்ள பெற்றோருக்கு,
        வணக்கம். நாளை இரண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் ஓவியம் மற்றும் பாடல் கண்காட்சி இருக்கிறது. அனைவரும் வருக. 
 என் மனம் பறக்க ஆரம்பித்து விட்டது.ஏனெனில் ஹரீஷ் மிகவும் நன்றாக படங்கள் வரைவான்.கண்காட்சி அறை முழுவதும் நம்ம பையன் படம்தான் இருக்கும்....யாருங்க ஹரீஷ் அம்மா? ஓ....நீங்களா......ரொம்ப நல்லா போட்ருகான்...நல்லா என்கரேஜ் பண்ணுங்க..தேங்க்ஸ்.ஆக்சுவலா இதெல்லாம் அவன் எங்க கத்துகிட்டான்.....எப்போ போட்டான்னே தெரியாது........நானே இப்போதான் பாக்கறேன்....என விதவிதமாக உரையாடல்கள் ...மனசுக்கள்ளே கற்பனையாய் ஓடுது.
அவன் வகுப்பில் படிக்கும் சேத்தனா அம்மா என்னிடம் " எப்போ போகலாம்? நான் வரலீங்க...ஏன்...உடம்பு முடியல...என்னங்க நீங்க...உங்க பையன் எவ்வளவு நல்லா வரைவான்... குரோசின் டாப்லட் போட்டுட்டு கிளம்புங்க... இந்த உசுப்பல் பத்தாதா எனக்கு...அவருக்கு போன் பண்ணி "நான்school bus ல போயிடறேன்...  எப்ப பாரு உங்களுக்கு மீட்டிங் தானே..ஹரீஷ் போடற டராயிங்ஸ ஊரே கொண்டாடுது உங்களுக்கு மட்டும் ஏன் அதெல்லாம் பாத்து ரசிக்க முடியலை?.4 மணிக்கு school க்கு வந்து பாத்துட்டு வழில என்னயும் குழந்தைகளையும் விட்டுட்டு நீங்க எங்க வேணா போங்க..."(கோபத்த எப்படி காட்டறது...)
 ஒரு வழியா சின்னவனையும் கூட்டிகிட்டு school க்கு போய் ...exhibition hall ல போய்.... Harish படங்கள கண்ணு தேட...மனம் என் பையன் ன்னு கர்வத்தில் மிதக்க...என்ன இது... எங்கேயும் harish படமே இல்ல... ஒரு குழந்தை ஒடி வந்து "ஆன்ட்டீ...இதோ பாருங்க ஹரீஷ் போட்ட படம்...
பக்கத்துல போய் பாத்தா... ஒரு நாய் குட்டி..அதோட வாலுல அவன் பேரு...
எனக்கு அழுகை வந்தது. அவன் படம் இல்லயேன்றத விட அவங்கப்பாவ அந்த கத்து கத்திட்டோமே.. "இத பாக்கவா என்ன வரச்சொன்ன?" ன்னு கோச்சுப்பாறேன்னு.... 
அவங்க டீச்சர பார்த்து "ஹரீஷோட மத்த ட்ராயிங்ஸெல்லாம் போடலியா?" ன்னு கேட்டேன். உடனே அவங்க "எனக்கு தெரியாதா....அவன் எவ்வனவு நல்லா படம் போடுவான்னு...எத்தன தடவ கேட்டாலும் நாய்குட்டி படம் மட்டும் தான் குடுத்தான்..." உள்ளே இப்போ அழுகை போய் கோபம் வந்தது...எங்க அவன்..."ஹரீஷ்..எங்க நீ போட்ட மத்த படமெல்லாம்? அந்த சிவன் படம், ஆஞ்சநேயர் படமெல்லாம் ஏன் எக்ஸிபிட் பண்ணல?...
அம்மா சர்க்குலர ஒழுங்கா படிச்சீங்களா?
படிச்சேன். அதுக்கென்ன இப்போ? அதுல என்னம்மா எழுதி இருந்தது? என்ன இருந்தது...ஆங் "இரண்டாம் வகுப்பு குழந்தைகளின் பாடல் மற்றும் ஓவிய கண்காட்சி"...ஏன் உன் படம் இல்ல..?
அம்மா! செகன்ட் ஸ்டான்டர்டு சில்ட்ரனோட போயட்ரி அண்டு ட்ராயிங் ன்னு தானே இருக்கு... ஹரீஷ் ஓட ட்ராயிங் எக்ஸிபிஷன்னா போட்டு இருக்கு? அத தான்  டெய்லி வீட்ல பாக்கறீங்களே...அங்க பாருங்க செல்வா, மணிமுத்து, குரு, சேத்தனா போட்ட படமெல்லாம்.. பாத்து அவங்கள அப்ரிசியேட் பண்ணுங்கம்மா... ன்னு சொல்லிட்டு சிரிச்சு கிட்டே அவன் ஓடி போய்ட்டான். "டங்..டங்.."ன்னு மண்டையில அடிச்ச மாதிரி இருந்தது. "ஆமாம் ஏன் இது எனக்கு தோணல..."
என் குழந்தையின் விஸ்வரூபம் எனக்கு ஆனந்தமளித்தது. இப்பவும் அழுகை வந்தது. அப்போதுதான் உள்ளே வந்த என் கணவர் "என்னம்மா கண்ணுல தண்ணி... உடம்பு ரொம்ப முடியலயா? சரி எங்க நம்ம பையன் போட்ட படம்?".. நான் சிரிச்சுகிட்டே சொன்னேன் "வாங்க... செகன்ட் ஸ்டான்டர்டு குழந்தைகளோட ட்ராயிங்ஸ பார்ப்போம்"
********************+*****************

1 comment:

ஜெயந்தி நாராயணன் said...

கமலா நல்லதொரு ஆரம்பம்... தொடர்ந்து எழுது..
வகுப்பறையை உயிர்ப்பிப்போம்.. என்ன நம்மாளுங்கதான் இங்க வர அடம் பிடிப்பாய்ங்க.. :)